இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்த முழுமையான விடியோ தொகுப்பை லண்டனைச் சேர்ந்த "சேனல் 4" தொலைக்காட்சி "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற தலைப்பில் ஒளிபரப்பியது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய அந்நாட்டுப் பிரதமர் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"சேனல் 4" ஒளிபரப்பிய காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட், ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளார்.
video click
SRI LANKA'S KILLING FIELDS
0 comments:
கருத்துரையிடுக